search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    ஆஞ்சநேயர் கோவிலில் நாளை மகாசுதர்சன ஹோமம்

    திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை மகா சுதர்சன ஹோமம் நடை பெறுகிறது.
    திருச்சி:

    திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர்   கோவிலில் உலக நன்மைக்காக   நாளை 21&ந்தேதி   மகாசுதர்சன ஹோமம் நடை பெறுகிறது.

    இக்கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னதி உள்ளது. 16 கரங்களுடன், சிறந்த வரப்பிரசாதியாக விளங்கும் இவரை பிரார்த்திக் கொண்டால் சிறந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது இப்பகுதி  மக்களின் நம்பிக்கை.

    இந்த சக்கரத்தாழ்வாருக்கு மாதந்தோறும் மகாசுதர்சனரின் ஜன்ம  நட்சத்திரமான சித்திரை   நட்சத்திரதன்று உலக நன்மைக்காக  மகா சுதர்சன யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அடுத்து அலங்காரத்துடன் மகா ஆரத்தியும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வரு கின்றனர்.
    Next Story
    ×