search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கோழிகளில் வெப்ப அயற்சியை தடுக்க ஆராய்ச்சி நிலையம் ஆலோசனை

    நாமக்கல் பண்ணைகளில் கோழிகளில் வெப்ப அயற்சியை தடுக்க ஆராய்ச்சி நிலையம் ஆலோசனை வழங்கி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி  இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. 

    இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வடகிழக்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மற்றும் 22-ந் தேதி கிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும். 

    வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 4 நாட்களுக்கு மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. 

    கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி மற்றும் மேல் மூச்சுக்குழல் அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    எனவே பண்ணையாளர்கள் தகுந்த குளிர்கால பராமரிப்பு முறைகளை கையாள்வதோடு, கோழிகளில் வெப்ப அயற்சியை தடுக்க தெளிப்பான்களை பயன்படுத்த வேண்டும். மேலும் வெயில் காலங்களில் வெள்ளைக்கழிச்சல் நோயின் தாக்கத்தை குறைக்க கோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×