search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆம்பூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

    ஆம்பூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்து அவரிடமிருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதிகளில் அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீசில் புகார்கள் உள்ளது.

    இதனால் உமராபாத் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படி சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே விசாரணையை தீவிரப் படுத்தினர். 

    விசாரணையில் கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40) என்பதும். இவர் ஆம்பூர் அடுத்த மேல் சான்றோர் குப்பம், பாட்டூர், உமராபாத், வாணியம்பாடி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 7 பவுன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×