search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் ஆணையர் பழனிகுமார்
    X
    தேர்தல் ஆணையர் பழனிகுமார்

    295 வாக்குச்சாவடிகளில் தேர்தல் தள்ளிவைப்பு - மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
    சென்னை:

    மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் காலை 7 மணிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க சுமார் 1.13 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே மக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம்.

    வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 3 பேர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். தற்போதுவரை 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் 295 வாக்குச்சாவடிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 
    கோவையில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தினர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×