search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய் வசந்த் எம்.பி.
    X
    சிறுவன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய் வசந்த் எம்.பி.

    நகைக்காக கொல்லப்பட்ட சிறுவன் குடும்பத்தினருக்கு விஜய் வசந்த் எம்.பி. ஆறுதல்

    நகைக்காக கொலை செய்யப்பட்ட நான்கு வயது சிறுவன் ஜோகன் ரிஷியின் குடும்பத்தினருக்கு விஜய் வசந்த் எம்.பி. ஆறுதல் கூறினார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்த ஜோகன் ரிஷி (வயது 4) என்ற சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    இந்நிலையில், கடியப்பட்டணத்தில் நகைக்காக ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்ட நான்கு வயது சிறுவன் ஜோகன் ரிஷியின்  இல்லத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. சென்றார். சிறுவன் ஜோகன் ரிஷியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×