search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்க வேண்டும்

    கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் உள்ள மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தனர்.
    நாகர்கோவில்:

    பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குமரி கிழக்கு  மாவட்ட தலைவர் அன்பு கிருஷ்ணன், செயலாளர் சேவியர், பொருளாளர் தங்கவேல், அமைப்பாளர் பச்சைமால் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் 10 வழிகளில் இருந்து வாகனங்கள் வருகிறது.  அதிவேகத்தில் வரும் வாகனங்களால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. 

    இது வரை 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கடந்த வாரம் கூட இங்கு நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×