என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்க வேண்டும்
Byமாலை மலர்27 Jan 2022 10:11 AM GMT (Updated: 27 Jan 2022 10:11 AM GMT)
கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் உள்ள மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தனர்.
நாகர்கோவில்:
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் அன்பு கிருஷ்ணன், செயலாளர் சேவியர், பொருளாளர் தங்கவேல், அமைப்பாளர் பச்சைமால் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் 10 வழிகளில் இருந்து வாகனங்கள் வருகிறது. அதிவேகத்தில் வரும் வாகனங்களால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
இது வரை 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கடந்த வாரம் கூட இங்கு நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைத்து உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X