search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
    X
    குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

    ஆனைமலை அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

    கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று வனத்தில் இருந்து வெளியே வந்து சாலையில் சுற்றித் திரிந்தது.
    கோவை:

    ஆழியார் அருகே வால்பாறை சாலையில் அமைந்துள்ளது சின்னார்பதி மலை கிராமம். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்   கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று வனத்தில் இருந்து வெளியே வந்து சாலையில்   சுற்றித்  திரிந் தது.

    அந்த யானை மலை கிராம மக்கள் வசிக்கும் குடியிருப் புக்குள் இரவு நேரங்களில் வந்து  பலா மரத்தில் இருந்து பழங்களை உண்டு எங்கும் செல்லாமல் அங்கேயே   இருந்து வருகிறது.  இதுகுறித்து வனத்துறையினருக்கு மலைவாழ் மக்கள் தகவல் கொடுத்தனர்.

    அந்த காட்டு யானையை கண்காணித்த வனத்துறையினர் அவ்வப்போது யானையை மலை கிராமத்திற் குள் வராமல் காட்டுக்குள் விரட்டினர். ஆனால் நேற்று மாலை வனத்திற்குள் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை ஆழியார்- வால்பாறை சாலையில் நடந்து வெகு தூரம் சென்றது.

    இதனால் அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பின்னர் மீண்டும் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த வனத்துறை ஊழியர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்ட முயற்சி செய்தனர்.ஆனால் நீண்ட நேரமாக வனத்துறையினருக்கு யானை போக்கு காட்டியது.    ஒருவழியாக வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதுகுறித்து அங்குள்ள மலை கிராம மக்கள் கூறும்போது:-

     இந்த ஒற்றை காட்டு யானை அடிக்கடி வனப்பகுதியை விட்டு உணவு தேடி எங்கள் குடியிருப்புக்குள் நுழைகிறது. உயிர் சேதம் ஏதும் ஏற்படுவதற்குள் நிரந்தரமாக அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும். எங்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம் என்றனர்.
    Next Story
    ×