search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலியான ஆடுகள்.
    X
    பலியான ஆடுகள்.

    ஆடுகளை கடித்துக் கொன்ற நாய்கள்

    ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு கணேஷ் ஓடிவந்து ஆடுகளை துரத்தி கடித்து கொண்டிருந்த நாய்களை துரத்திவிட்டுள்ளார்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சி மாரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ் ( வயது 45). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது 7 ஆடுகள் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. 

    அப்போது அங்கு வந்த இரண்டு தெருநாய்கள் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை துரத்தி குரல்வளை, மற்றும் தொடைப்பகுதிகளில் கடித்து குதறியுள்ளது. அப்போது ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு கணேஷ் ஓடிவந்து ஆடுகளை துரத்தி கடித்து கொண்டிருந்த நாய்களை துரத்திவிட்டுள்ளார். 

    இருப்பினும் நாய்கள் கடித்ததால் 3 ஆடுகள் செத்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நடுவச்சேரி பகுதியில் ஆடு, கோழி இறைச்சி விற்பவர்கள் அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ரோட்டோரத்திலேயே வீசிவிடுகின்றனர். 

    அந்த கழிவுகளை தின்று பழகிய நாய்கள் இறைச்சி கழிவுகள் கிடைக்காதபோது ஆடுகளை குறிவைத்து கடித்து குதறுவதாகவும், இதுபோல் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர். கடந்த ஒரு மாதம் முன்பு சின்னேரிபாளையம் ஊராட்சி பகுதியில் ஆடு, மற்றும் கோழிகளை நாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×