search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    கொரோனா வார்டு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

    நாமக்கல் அருகே கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே அமைந்துள்ள கொண்டிசெட்டிபட்டி பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் 960 வீடுகள் உள்ளன. 

    இப்பகுதியில் கொரோனா வார்டு  அமைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    இதை தொடர்ந்து அவர்கள் இன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    Next Story
    ×