என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முழு ஊரடங்கை மீறிய தொழிற்சாலை, இறைச்சி கடைகளுக்கு அபராதம்
Byமாலை மலர்24 Jan 2022 9:56 AM GMT (Updated: 24 Jan 2022 9:56 AM GMT)
ஆம்பூரில் முழு ஊரடங்கை மீறி இயங்கிய தொழிற்சாலை, இறைச்சி கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆம்பூர்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கு அறிவித்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.
உரிய ஆவணங்களுடன் சென்றவர்கள் மட்டும் அத்தியாவசிய பணிகளுக்கு வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி ஆம்பூரில் பல இடங்களில் ஷூ கம்பெனி நிறுவனங்கள் தொழிலாளர்கள் கூட்டமாக வரவழைத்து பணியில் ஈடுபடுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் குழுவினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதிகளை மீறி ஏங்கிய 2 ஷூ கம்பெனி தொழிற்சாலைகளும் 4 கடைகள் ஆகியவற்றில் மொத்தம் 11.500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல ஆம்பூர் டவுன் போலீசார் நடத்திய சோதனையில் 3 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X