search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சாலையோரம் நின்ற லாரியில் 2.25 லட்சம் மதுபாட்டிகள் திருட்டு

    சாலையோரம் நின்ற லாரியில் 2.25 லட்சம் மதுபாட்டிகளை திருடியவர்களுக்கு வலை வீச்சு
    திருச்சி:

    மதுராந்தகத்திலுள்ள மதுபான ஆலையிலிருந்து 975 மதுபானப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு, சிவகங்கை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரி திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தது.

    அப்போது தேநீர் அருந்துவதற்காக, லாரி ஓட்டுநர் லாரியை சாலையோரத்தில் நிறுத்திவைத்தார். சிறிது  நேரம் கழித்து வந்தபோது லாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 லட்சம் மதிப்பிலான 36 மதுபான பெட்டிகள் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநர், சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடி சென்றவர்களை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×