search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு காட்சி.
    X
    கோப்பு காட்சி.

    கன்னியாகுமரியில் லாட்ஜில் விபச்சாரம்: 3 இளம்பெண்கள் மீட்பு வாலிபர் கைது

    கன்னியாகுமரியில் லாட்ஜில் 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் வெளியில் இருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரம் நடப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் அந்த லாட்ஜூக்குவிரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த லாட்ஜில் உள்ள ஓரு அறையில் 3 வாலிபர்கள் 3 இளம்பெண்களுடன் அரைகுறை ஆடையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

    உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அப்போது அங்குஇருந்த 2 வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் அங்கு இருந்த 3 இளம்பெண்களை மீட்டனர். அவருடன் இருந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட இளம் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×