search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவையில் என்ஜினீயர் மர்மசாவு

    மும்பையை சேர்ந்த வாலிபர் ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    கோவை:

    மும்பையை சேர்ந்தவர் முக்தர் அகமத் (வயது 58). என்ஜினீயர். இவர் உள்பட 9 பேர் சில தினங்களுக்கு முன்பு கோவை வந்தனர். எல்.அண்ட்டி பைபாசில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி கோவையில் நடைபெற்று வரும் கட்டுமான நிறுவன பணிக்கு சென்று வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று முக்தர் அகமத் வேலைக்கு செல்லாமல் அறையில் இருந்தார். மற்ற அனைவரும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் ஓட்டல் அறைக்கு திரும்பினர். அப்போது முக்தர் அகமத்தின் அறைக்கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 

    அப்போது முக்தர் அகமது குளியலறையில் மயங்கிய நிலையில் சுயநினைவை இழந்து விழுந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

    அவர் உடல் நிலை சரியில்லாமல்  இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணங்களில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×