என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோப்பு காட்சி. கோப்பு காட்சி.](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201081626574046_Tamil_News_Kanyakumari-NewsKanyakumari-Polio-immunation-for-1_SECVPF.gif)
X
கோப்பு காட்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
By
மாலை மலர்8 Jan 2022 10:56 AM GMT (Updated: 8 Jan 2022 10:56 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற
23-ந்தேதி நடைபெறுகிறது. முகாமில் 1 லட்சத்து 31 ஆயி ரத்து 401 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. முகாம்கள் மருத் துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் என 1,236 முகாம் கள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
23-ந்தேதி நடைபெறுகிறது. முகாமில் 1 லட்சத்து 31 ஆயி ரத்து 401 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. முகாம்கள் மருத் துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் என 1,236 முகாம் கள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
இதற்கான பணியில் 4,944 பேர் (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, சத்துணவு, நகராட்சி துறை பணியாளர் கள்) ஈடுபட உள்ளனர். இது தவிர முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிர்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேவையான சொட்டு மருந்து மாவட்ட துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சியில் உரிய குளிர்பதன முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளன. மக்கள் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களில் 20 முகாம்களும், உரிய பஸ் வசதி இல்லாத மலை பகுதி களில் நடமாடும் குழுக்கள் 14-ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் ஆய்வு பணிகளுக்கு 146 மேற் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சொட்டு மருந்து கொடுக்கும் பணியாளர்களுக்கு (பொது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சத்துணவு அமைப் பாளர்கள் மற்றும் தன் னார்வ தொண்டர்கள்) பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
எனவே வருகிற 23-ந்தேதி அன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)