search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.
    X
    வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

    திருச்சியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு வீடாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

    திருச்சியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    திருச்சி:

    கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவி வருவதால், தமிழக அரசு, தளர்வுகள் அடிப்படையில் ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. 

    அந்த அடிப்படையில் இன்று மாநகராட்சி  துணை ஆணையர் சண்முகம் தலைமையில்,  ஊழியர்கள், திருச்சி புத்தூர் பகுதியில் வீடு வீடாக சென்று, தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களைக் கண்டறிந்து, கொரோனா தடுப்பு ஊசி செலுத்திவருகின்றனர். 
    Next Story
    ×