என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆம்பூரில் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு
Byமாலை மலர்8 Jan 2022 9:32 AM GMT (Updated: 8 Jan 2022 9:32 AM GMT)
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆம்பூரில் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆம்பூர்:
ஆம்பூரில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வது குறித்து தாசில்தார் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
ஆம்பூர் பஜார் பகுதியில் காய்கறி கடைகள் இயங்கி வருகிறது. கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனால் ஆம்பூர் பாங்கி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் காய்கறி கடைகள் கிருஷ்ணாபுரம் சீனிவாச பெருமாள் சொந்தமான மைதானத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தாசில்தார் அனந்த கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா முன்னிலை வகித்தார். வணிகர் சங்கங்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X