search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    திருச்சி ஏர்போர்ட்டில் சரக்கு ஏற்றுமதி நிறுத்தம்

    திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நாளை (9-ந் தேதி) முதல் சரக்கு ஏற்றுதி சேவைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நாளை (9-ந் தேதி) முதல் சரக்கு ஏற்றுதி சேவைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிர்வாக காரணங்களால் ஏற்றுமதி சேவைகள் நிலையம் மூடப்படவுள்ளது. மீண்டும் சேவைகள் தொடங்குவதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். 

    மேலும் அனைத்து விமான நிறுவனங்கள் ஐ.ஏ.டி.ஏ. முகவர்கள் கன்சோல்கள் விமான நிலைய அலுவலகத்தில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச விமான சரக்கு முனையம் ஏற்றுமதிக்கு எந்த சரக்குகளையும் முன்பதிவு செய்ய ஏற்கவேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×