search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி - பொதுமக்கள் புகார்

    பொங்கல் வைக்க உபயோகப்படுத்தினால் சிகப்பு கலரில் பொங்கல் இருக்கும் என அரிசி வாங்கிய பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 13 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. ஒரு சில ரேஷன் கடைகளில் பச்சரிசியில் அதிக அளவில் சிகப்பு அரிசி கலந்து வருவதால் சமையலுக்கு பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. 

    அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் சூழலில் பச்சரிசி வாங்கி செல்லும் பொதுமக்கள் பொங்கல் வைக்க உபயோகப்படுத்தினால் சிகப்பு கலரில் பொங்கல் இருக்கும் என அரிசி வாங்கிய பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து குடிமை பொருள் அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து கடைகளிலும் தரமான அரிசியை வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×