search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவனின் தொண்டை குழியில் சிக்கி இருந்த 5 ரூபாய் நாணயத்தை டாக்டர்கள் எடுத்ததை படத்தில் காணலாம்.
    X
    சிறுவனின் தொண்டை குழியில் சிக்கி இருந்த 5 ரூபாய் நாணயத்தை டாக்டர்கள் எடுத்ததை படத்தில் காணலாம்.

    அரூர் அருகே சிறுவனின் தொண்டை குழியில் சிக்கிய 5 ரூபாய் நாணயம்

    சிறுவனின் தொண்டையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை அரூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நவீன கருவி மூலம் எடுத்தனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வீரப்பநாய்க்கன்ப்பட்டியை சேர்ந்த முனிவேல். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுடைய மகன் ரிஷ்வந்த் (வயது4). சிறுவன் நேற்று காலை தனது தாயாரிடம் 5 ரூபாய் வாங்கி கொண்டு கடைக்கு சென்றான். அப்போது சிறுவன் வாயில் வைத்திருந்த 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி உள்ளான். இதுகுறித்து சிறுவன் தனது தாயார் ஜெயஸ்ரீயிடம் கூறியுள்ளான்.

    இதனையடுத்து அவர் உறவினர்கள் உதவியுடன் சிறுவனை அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். டாக்டர் அருண் தலைமையில் மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தனர். முதலில் குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது தொண்டை குழியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

    இதனையடுத்து டாக்டர்கள் குழுவினர், சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து லரிங்கோ ஸ்கோப் என்ற நவீன கருவி மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து 5 நிமிடத்தில் சிறுவனின் தொண்டை குழியில் சிக்கி இருந்த 5 ரூபாய் நாணயத்தை மருத்துவக்குழுவினர் வெளியே எடுத்தனர். இதனால் சிறுவனின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவ குழுவினருக்கு சிறுவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×