என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட உரிமை இல்லை: உயர்நீதிமன்றம்
Byமாலை மலர்5 Nov 2021 9:59 AM GMT (Updated: 5 Nov 2021 1:19 PM GMT)
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை நாட உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கோவையை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் 2013-ம் ஆண்டில் தனக்கும், ஜோசப் பேபி என்பவருக்கும் திருமணம் ஆனதாகவும், பிறகு 2016-ம் ஆண்டு முதல் ஜோசப் தன்னைவிட்டு பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பதில் மனு அளித்த ஜோசப் பேபி, கலைச்செல்விக்கும் எனக்கும் திருமணமே நடக்கவில்லை. அதனால், கலைச்செல்வியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என பதில் மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், ஜோசப் மனுவை ஏற்றுக்கொண்டு, கலைச்செல்வியின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
கோவை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில், கலைச்செல்விக்கும் ஜோசப்புக்கும் இடையே பணபரிவர்த்தனை தொடர்பான முன்விரோதத்தால், கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாக குறிப்பிட்ட நீதிபதிகள், “திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்காக குடும்ப நல நீதிமன்றத்தை நாடுவதற்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை’’ என்று தங்களின் தீர்ப்பில் தெளிவுப்படுத்தி குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X