search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் வழங்கிய காட்சி.
    X
    நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் வழங்கிய காட்சி.

    தாராபுரத்தில் 344 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் வழங்கினர்

    ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் 275 பயனாளிகளுக்கு ரூ.99 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
    தாராபுரம்:

    தாராபுரத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் 275 பயனாளிகளுக்கு ரூ.99 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

    அதேபோல வருவாய்த் துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.45,622 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 60 பயனாளிகளுக்கு ரூ.7.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 344 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
    Next Story
    ×