search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    உடுமலை அருகே கோழிப்பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    பணி நீக்கம் செய்த தொழிலாளர்களை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த எலையமுத்தூர் அருகே தனியார் முட்டை கோழி பண்ணை உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது தொழிலாளர்களின் உரிமைகளை வழங்க மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியதுடன் 2019 - 21 இடைப்பட்ட காலத்தில் பொய்யான காரணங்களை கூறி பணி நீக்கம் செய்த தொழிலாளர்களை பணியமர்த்த கோரியும், 30 சதவீத போனஸ் வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர். 

    இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை யொட்டி அமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×