search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாயை கயிறு கட்டி மீட்ட போது எடுத்தபடம்.
    X
    நாயை கயிறு கட்டி மீட்ட போது எடுத்தபடம்.

    உடுமலை அருகே கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு

    கிணற்றின் பக்கவாட்டில் உள்ள பாறையை பிடித்து கொண்டு இரவு முழுவதும் நாய் குரைத்து கொண்டிருந்தது.
    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள உடுக்கம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய் அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. 

    கிணற்றின் பக்கவாட்டில் உள்ள பாறையை பிடித்து கொண்டு இரவு முழுவதும் குரைத்து கொண்டிருந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  

    நிலைய அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி போராடி நாயை உயிருடன் மீட்டனர். நாயை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
    Next Story
    ×