search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலமைப்பித்தன்
    X
    புலமைப்பித்தன்

    புலமைப்பித்தன் ஆஸ்பத்திரியில் அனுமதி: வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

    உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தனுக்கு வென்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை :

    அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவராக இருந்த கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 85) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு தற்போது வென்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலையை, ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    Next Story
    ×