search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போலீஸ் நிலையங்களுக்கு முள்கம்பியுடன் பேரிகார்டுகள்

    பேரிகார்டில் முழுவதும் கம்பி சுற்றிய பேரிகார்டுகள் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது.
    உடுமலை:

    போலீசார் சார்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், போராட்டங்களின் போது போராட்டங்களை தடுத்து நிறுத்துவதற்காகவும் சாலைகளில் பேரிகார்டுகள் வைக்கப்படுகிறது.

    பெரும்பாலும் பாதுகாப்புக்கு மட்டும் இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக பேரிகார்டில் முழுவதும் கம்பி சுற்றி பேரிகார்டுகள் போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது.  

    இந்தநிலையில் உடுமலை போலீஸ் நிலையத்திற்கு முள்கம்பி சுற்றிய 5 பேரிகார்டு வந்துள்ளது. கடுமையான போராட்டங்களின் போது மட்டும் பயன்படுத்தப்படும் இதுபோன்ற பேரிகார்டுகள், போராட்டம் போன்ற சூழ்நிலையே இல்லாத உடுமலைக்கு வந்துள்ளது. 

    இதுபற்றி போலீசார் கூறுகையில்:

    மாவட்டத்திற்கு வந்த பேரிகார்டுகள், போலீஸ் நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பயன்படுத்தும் அளவிற்கு இங்கு போராட்டங்கள் நடப்பதில்லை என்றனர்.
    Next Story
    ×