search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு-உடுமலை வியாபாரிகளுக்கு அபராதம்

    கடைகளில் உள்ளவர்களும் வரும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
    உடுமலை:

    உடுமலை நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள்  கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து 2  கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டதோடு 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், கடை ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்த 2 கடைகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறியதாவது :-

    கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கை கழுவும் வசதி, சானிடைசர் உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும். கடைகளில் உள்ளவர்களும் வரும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளி பராமரிக்கும் வகையில் குறைந்தளவு மக்களையே  அனுமதிக்க வேண்டும்.

    விதி மீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் கவர்கள், கேரி பேக், டம்ளர்கள் இருந்தாலும்  கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×