என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![திருமுருகன்பூண்டி காவல் நிலையம். திருமுருகன்பூண்டி காவல் நிலையம்.](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106301246172969_Tamil_News_Deputy-Commissioner-Arvind-laid-the-foundation-stone-for-the_SECVPF.gif)
X
திருமுருகன்பூண்டி காவல் நிலையம்.
திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம்-துணை கமிஷனர் அரவிந்த் அடிக்கல் நாட்டினார்
By
மாலை மலர்30 Jun 2021 7:16 AM GMT (Updated: 30 Jun 2021 7:16 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சுமார் ரூ.1கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு தனித்தனி அறைகள் கட்டப்பட உள்ளன.
திருப்பூர்:
2018-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி முதல் திருமுருகன்பூண்டி போலீஸ்நிலையம் திருமுருகன்பூண்டியில் உள்ள அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் அங்கு பணியாற்றும் போலீசாருக்கும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கும் போதுமான இடவசதி இல்லாமல் திருமுருகன்பூண்டி போலீஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்த கட்டிடத்தில் போலீஸ் நிலையம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையத்தில் போலீஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் போலீஸ் நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் கலந்து கொண்டு போலீஸ் நிலைய கட்டிடத்திற்குஅடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.1கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு தனித்தனி அறைகள் கட்டப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் கந்தசாமி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் மணவாளன், உதவி பொறியாளர் கோமதிசங்கர் உள்பட திருமுருகன்பூண்டி போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)