என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊஞ்சல் விளையாடிய போது சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பலி
Byமாலை மலர்20 Jun 2021 10:33 AM GMT (Updated: 20 Jun 2021 10:33 AM GMT)
பள்ளி சிறுவர்கள் வீட்டு அருகில் உள்ள மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது
திருப்பூர்:
சேலம் மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன்( வயது 36). இவர் தனது மனைவி செண்பகவல்லி (28) , குழந்தைகள் மித்ரன்(10), பிரசன்னா(6) ஆகியோருடன் திருப்பூர் மாவட்டம் பளவஞ்சிபாளையம் சிவசக்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் சிவசக்தி நகர் பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் வீட்டு அருகில் உள்ள மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. மித்ரனும் அங்கு விளையாடி வந்துள்ளான்.
சம்பவத்தன்று மித்ரன் ஊஞ்சலை சுற்றி சுற்றி விளையாடியதாக தெரிகிறது. வேகமாக சுற்றியதில் மித்ரன் கழுத்தை சேலை இறுக்கியது. இதில் மயங்கி கிடந்த மித்ரனை வெங்கடேஸ்வரன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மித்ரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X