என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மது விற்பனை மது விற்பனை](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106160906163788_Tamil_News_Rs-45-crore-worth-of-liquor-sold-in-one-day-in-thoothukudi_SECVPF.gif)
X
மது விற்பனை
தூத்துக்குடியில் ஒரே நாளில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை
By
மாலை மலர்16 Jun 2021 3:36 AM GMT (Updated: 16 Jun 2021 3:36 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வு காரணமாக மீண்டும் திறக்கப்பட்டன.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வு காரணமாக மீண்டும் திறக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 144 கடைகள் திறக்கப்பட்டன.
நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து கடைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் சில கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. பல கடைகளில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. இதனால் மதுபானங்கள் விற்பனையும் பெரிய அளவில் உச்சத்தை எட்டவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையாகும் அளவுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் ரூ.4½ கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன. இதில் 1,700 பெட்டி பீர் வகைகளும், 6 ஆயிரம் பெட்டி இதர மது பானங்களும் விற்பனையாகி இருந்தன. இது வழக்கமான விற்பனைதான் என்றும், அனைத்து மதுபானங்களும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வு காரணமாக மீண்டும் திறக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 144 கடைகள் திறக்கப்பட்டன.
நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து கடைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் சில கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. பல கடைகளில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. இதனால் மதுபானங்கள் விற்பனையும் பெரிய அளவில் உச்சத்தை எட்டவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையாகும் அளவுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் ரூ.4½ கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன. இதில் 1,700 பெட்டி பீர் வகைகளும், 6 ஆயிரம் பெட்டி இதர மது பானங்களும் விற்பனையாகி இருந்தன. இது வழக்கமான விற்பனைதான் என்றும், அனைத்து மதுபானங்களும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)