search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 மதுபாட்டில்கள் பறிமுதல் - பெண் கைது

    வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    பொம்மிடி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 55). இவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சாரதாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவர் வீட்டில் 400 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சாந்தாவை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×