என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பரங்குன்றம் தொகுதியில் 77 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
Byமாலை மலர்5 March 2021 6:20 AM GMT (Updated: 5 March 2021 6:20 AM GMT)
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும், பெண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும் அமைக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 458 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் சேர்ந்து வாக்குபதிவு செய்வதற்காக 132 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகிறது. மேலும் ஆண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும், பெண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும் அமைக்கப்படுகிறது.
மொத்த வாக்குசாவடி 458-ல் வடபழஞ்சி, கீழகுயில்குடி, நாகமலை புதுக்கோட்டை, பெருங்குடி, கூத்தியார்குண்டு, நிலையூர்கொம்பாடி, பனையூர்,தனக்கன்குளம், சாக்கிலிப் பட்டி, பாரபத்தி, சிலைமான் ஆகிய ஊராட்சிகளில் சாதி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடந்த காலத் தேர்தல்களில் பதற்றம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 77 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று காவல்துறை மூலம் கண்டறிப்பட்டு உள்ளது.
எனவே வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் மாதம் 6-ந்தேதி அன்று பதற்றமான வாக்குசாவடிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசுவரி, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மூர்த்தி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 458 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் சேர்ந்து வாக்குபதிவு செய்வதற்காக 132 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகிறது. மேலும் ஆண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும், பெண் வாக்காளர்களுக்கு என்று தனியாக 163 வாக்குச்சாவடியும் அமைக்கப்படுகிறது.
மொத்த வாக்குசாவடி 458-ல் வடபழஞ்சி, கீழகுயில்குடி, நாகமலை புதுக்கோட்டை, பெருங்குடி, கூத்தியார்குண்டு, நிலையூர்கொம்பாடி, பனையூர்,தனக்கன்குளம், சாக்கிலிப் பட்டி, பாரபத்தி, சிலைமான் ஆகிய ஊராட்சிகளில் சாதி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடந்த காலத் தேர்தல்களில் பதற்றம் என்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேபோல நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 77 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று காவல்துறை மூலம் கண்டறிப்பட்டு உள்ளது.
எனவே வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் மாதம் 6-ந்தேதி அன்று பதற்றமான வாக்குசாவடிகளில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது.
மேலும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுவார்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசுவரி, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மூர்த்தி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X