என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![இறந்து போன திமிங்கலம் இறந்து போன திமிங்கலம்](https://img.maalaimalar.com/Articles/2021/Jan/202101300758258298_Tamil_News_Tamil-News-2-Ton-whale-in-Tiruvottiyur-Beach_SECVPF.gif)
X
இறந்து போன திமிங்கலம்
திருவொற்றியூர் கடற்கரையில் 2 டன் எடையுள்ள திமிங்கலம் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
By
மாலை மலர்30 Jan 2021 2:28 AM GMT (Updated: 30 Jan 2021 2:28 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவொற்றியூர் கடற்கரையில் 2 டன் எடையுள்ள திமிங்கலம் மீண்டும் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்:
சென்னை திருவொற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள தூண்டில் வளைவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு சுமார் 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது. அதைப்பார்க்க அப்பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, உயிருக்குப் போராடி கொண்டிருந்த திமிங்கலத்தை மீனவர்கள், பைபர் படகு மூலம் கரையில் இருந்து இழுத்து சென்று நடுக்கடலில் விட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 டன் எடை கொண்ட அந்த திமிங்கலம் மீண்டும் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. மீனவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது அந்த திமிங்கலம் துடிதுடித்து இறந்து போனது.
பின்னர், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் இறந்து போன திமிங்கலத்தை மாநகராட்சி ஊழியர்கள் கிரேன் மூலம் இழுத்து வந்து கடற்கரையில் 6 அடிக்கு பள்ளம் தோண்டி புதைத்தனர்.
சென்னை திருவொற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள தூண்டில் வளைவை ஒட்டி நேற்று முன்தினம் இரவு சுமார் 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது. அதைப்பார்க்க அப்பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, உயிருக்குப் போராடி கொண்டிருந்த திமிங்கலத்தை மீனவர்கள், பைபர் படகு மூலம் கரையில் இருந்து இழுத்து சென்று நடுக்கடலில் விட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 2 டன் எடை கொண்ட அந்த திமிங்கலம் மீண்டும் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. மீனவர்கள் ஓடிச்சென்று பார்த்த போது அந்த திமிங்கலம் துடிதுடித்து இறந்து போனது.
பின்னர், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் இறந்து போன திமிங்கலத்தை மாநகராட்சி ஊழியர்கள் கிரேன் மூலம் இழுத்து வந்து கடற்கரையில் 6 அடிக்கு பள்ளம் தோண்டி புதைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)