என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்24 Oct 2020 9:46 AM GMT (Updated: 24 Oct 2020 9:46 AM GMT)
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 70). இவர் நேற்று காலையில் கடலையூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கயத்தாறு திருமங்கலகுறிச்சியை சேர்ந்த சீனிப்பாண்டி மகன் சுடலைமணி ( 27) என்பவர் வட்டார அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அந்தோணி ஜான் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்தோணிசாமி படுகாயமடைந்தார்.
அவரை சுடலைமணி ஒரு ஆட்டோவில் ஏற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தார். அங்கிருந்த டாக்டர், அவரை சோதனை செய்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்துகிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X