என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாநகராட்சி முன்பு தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்19 Oct 2020 2:58 PM GMT (Updated: 19 Oct 2020 2:58 PM GMT)
அண்ணா பல்கலைக்கழகத்தை சிறப்பு பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சித்து வருவதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
அண்ணா பல்கலைக்கழகத்தை சிறப்பு பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சித்து வருவதை கண்டித்தும், இதற்காக மத்திய அரசுக்கு கடிதம்எழுதிய அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா பதவி விலக கோரியும் திருப்பூர் மாநகராட்சி முன்பு நேற்று காலை தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாணவர் கழக நிர்வாக தேன்மொழி தலைமை தாங்கினார். பிரெட்டர்னிட்டி இயக்கத்தை சேர்ந்த ஜெய்லானி, இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சம்சீர் அகமது, திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் முகில்ராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையொட்டி அங்கு திருப்பூர் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X