search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குளித்தலை அருகே 2 குடும்பத்தினர் இடையே தகராறு - 7 பேர் மீது வழக்கு

    குளித்தலை அருகே 2 குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (55). இந்த 2 குடும்பத்தினர் இடையே வரப்பு தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் அரிவாள், களைகொத்தி, குச்சி போன்றவற்றால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

    இதில் முருகேசன், ஜெகநாதன், ஜெகநாதனின் மனைவி சரோஜா(40), மகள் கவிதா (20) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகராறு தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில் ஜெகநாதன், சரோஜா, கவிதா ஆகிய 3 பேர் மீதும், ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் முருகேசன், அவரது மனைவி பொன்னம்மாள், மகன் பழனிச்சாமி, மகள் காமாட்சி ஆகிய 4 பேர் மீதும் குளித்தலை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×