என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி வெடிகுண்டு தாக்குதல் - கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல்
Byமாலை மலர்19 Aug 2020 6:07 PM GMT (Updated: 19 Aug 2020 8:17 PM GMT)
தூத்துக்குடி வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு காவலர் சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துரைமுத்துவுடன் பதுங்கி இருந்த கூட்டாளிகளான சாமிநாதன், சிவராம லிங்கம் மற்றும் வனத்துறை ஊழியர் சுடலைக்கண்ணு ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, 3 பேருக்கும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X