என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளை படத்தில் காணலாம். கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.](https://img.maalaimalar.com/Articles/2020/Jul/202007311940019194_Tamil_News_Farmers-besiege-Kovilpatti-Assistant-Collector-office_SECVPF.gif)
X
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.
உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - கால்நடை சந்தைகளை திறக்க கோரிக்கை
By
மாலை மலர்31 July 2020 2:10 PM GMT (Updated: 31 July 2020 2:10 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கால்நடை சந்தைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமையில் விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது 2 செம்மறி ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து அழைத்து வந்திருந்தனர். பின்னர் விவசாயிகள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் விளைவித்த பருத்தி, மக்காச்சோளம், வத்தல், பருப்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் பெறாததால் அவதிப்படுகின்றனர்.
மேலும் கால்நடை சந்தைகள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக செயல்படாததால், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை உரிய விலைக்கு விற்க முடியாத நிலை உள்ளது. நாளை (சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கால்நடை சந்தைகள் செயல்படாததால் விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சந்தைகளை உடனே மீண்டும் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பரமேசுவரன், இளையரசனேந்தல் பிர்கா உரிமைமீட்பு குழு தலைவர் முருகன், ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)