search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆரணி அருகே மாற்றுதிறனாளிகள் பள்ளியில் மாணவன் மர்மமரணம்

    ஆரணி அருகே மாற்றுதிறனாளிகள் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள முள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் அரசு போக்குவரத்து டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 14) மாற்றுதிறனாளியான இவர் அங்குள் தனியார் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று பள்ளியில் இருந்த கோகுலுக்கு உடல்நிலை சரியில்லை என அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் மாணவனை ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் கோகுல் இறந்தார். அங்கு விரைந்து சென்ற தயாளன் மகன் இறந்ததை கண்டு கதறிஅழுதார்.

    பெற்றோர்கள் பள்ளிதரப்பில் கேட்டதற்கு சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×