search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி உயிரிழப்பு
    X
    தொழிலாளி உயிரிழப்பு

    காலாவதியான மதுகுடித்த தொழிலாளி உயிரிழப்பு

    ஆண்டிப்பட்டி அருகே காலாவதியான மதுகுடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆண்டிப்பட்டி

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோட்டுலூத்து கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது33). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மதுகுடித்துவிட்டு வருவாராம். சம்பவத்தன்றும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து படுத்ததும் சிறிதுநேரத்தில் மர்மமான முறையில் இறந்தார். 

    இதுபற்றி பாண்டியனின் மனைவி ராஜதானி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ராஜதானி மற்றும் உள்ளிட்ட சுற்றுபகுதியில் போலி மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. காலாவதியான இந்த மதுபானங்களை பருகுவதால் அவை விஷமாகி உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. 

    பாண்டியன் போலி மதுவை அருந்தியதால் இறந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×