என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூரில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் பலி
Byமாலை மலர்3 Aug 2019 8:52 AM GMT (Updated: 3 Aug 2019 8:52 AM GMT)
கூடலூரில் இன்று அதிகாலை 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கருவாரக்குன்னு அருகே உள்ளது நீலம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் அக்ரம் முகமது (வயது 32). இவர் சமீபத்தில் புதிய கார் வாங்கினார்.
தனது 2 நண்பர்களுடன் நேற்று இரவு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டார். கார் இன்று அதிகாலை 3 மணிக்குமேல் கூடலூர் அருகே வந்தது. அங்குள்ள வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் இருந்து குடியிருப்பு பகுதியில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு தூங்கிய குடியிருப்புவாசிகள் எழுந்து பார்த்தபோதுசம்பவ இடத்திலேயே அக்ரம் முகமது பலியானார். 2 நண்பர்கள் காயங்களுடன் கிடந்தனர்.
இது குறித்து கூடலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான அக்ரம் முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கருவாரக்குன்னு அருகே உள்ளது நீலம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் அக்ரம் முகமது (வயது 32). இவர் சமீபத்தில் புதிய கார் வாங்கினார்.
தனது 2 நண்பர்களுடன் நேற்று இரவு ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டார். கார் இன்று அதிகாலை 3 மணிக்குமேல் கூடலூர் அருகே வந்தது. அங்குள்ள வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் இருந்து குடியிருப்பு பகுதியில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு தூங்கிய குடியிருப்புவாசிகள் எழுந்து பார்த்தபோதுசம்பவ இடத்திலேயே அக்ரம் முகமது பலியானார். 2 நண்பர்கள் காயங்களுடன் கிடந்தனர்.
இது குறித்து கூடலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான அக்ரம் முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X