search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் ஸ்டிரைக் தொடரும்: தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் பேட்டி
    X

    பஸ் ஸ்டிரைக் தொடரும்: தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் பேட்டி

    “பஸ் ஸ்டிரைக் தொடரும். நீதிபதிகள் தெரிவித்த கருத்து குறித்து அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்” என்று தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறினார். #TNTransportstrike #Busstrike

    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.57 மாற்று காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததோடு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும், அரச தரப்பிலும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

    அதன் பின்னர் பஸ் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், வேலை நிறுத்த தடையை நீக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவு குறித்து தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர், “பஸ் ஸ்டிரைக் தொடரும். நீதிபதிகள் தெரிவித்த கருத்து குறித்து அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்” என்றார். #TNTransportstrike #Busstrike #tamilnews

    Next Story
    ×