என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம்:
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்திட கோரியும், சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து களை இயக்க கோரியும், சாத்தான்குளம் பகுதியில் அரசு விரைவு பஸ்களை அடிக்கடி நிறுத்தம் செய்வதை கண்டித்தும், சாத்தான் குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் வாசக சாலை பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து அமைப்பு தலைவர் சுதாகார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜனார்த்தனம், மகிளா காங் கிரஸ் தலைவி ஜாக்குலின் கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அலெக்ஸ் ஜோசப் வரவேற்று பேசினார். தங்கம்மாள்புரம் பொன் பாண்டியன் கண்டன பேருரையாற்றினார். மாவட்ட பிற்பட்டோர் பிரிவு தலைவர் ஜெயக்கொடி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகர், சாத்தை நகர தலைவர் வேணு கோபால், வக்கீல்கள் மகேந்திரன், சந்திரசேகர் உள்பட பலர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கர், வக்கீல் பெலிக்ஸ், ஆத்தூர் சுந்தர பாண்டியன், குணமால், மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் கண்மணி ஜெயபிரகாஷ், ஜோசப் ஆல்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செல்வன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்