என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வலங்கைமான் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து கொத்தனார் கொலை: இளநீர் வியாபாரி கைது வலங்கைமான் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து கொத்தனார் கொலை: இளநீர் வியாபாரி கைது](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704271716133625_BrickLayer-killed-arrested-coconut-vendor-in-valangaiman_SECVPF.gif)
வலங்கைமான் அருகே உருட்டுக்கட்டையால் அடித்து கொத்தனார் கொலை: இளநீர் வியாபாரி கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கோவிந்தக்குடி தெற்கு தெரு காலனி பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் பாலாஜி (வயது 24) கொத்தனார்.
நேற்று இரவு இவர் தெருவில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரியான கோபி (வயது 40) என்பவர் தட்டி கேட்டுள்ளார்.
இதில் பாலாஜிக்கும், கோபிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இந்த தகராறில் பாலாஜி வைத்திருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது.
இதனை அவர் எடுக்க கீழே குனிந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த கோபி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு ஓடிவந்து பாலாஜியின் தலையின் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.அவர் பேச்சுமூச்சின்றி மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பாலாஜியின் சகோதரி மேத்தா (35) அங்கு ஓடிவந்து அதனை தடுத்தபோது அவரையும் கோபி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவரும் படுகாயமடைந்தார்.
இதனை கண்ட தெருவாசிகள் ஓடிவந்து தகராறை தடுத்து மயங்கி கிடந்த பாலாஜியையும், படுகாயமடைந்த மேத்தாவையும் மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாலாஜியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த மேத்தாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பாலாஜியை உருட்டுக்கட்டையால் கோபி அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை அடித்து கொலை செய்த இளநீர் வியாபாரி கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)