search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் வாக்கிங் சென்ற 12 பேரை கடித்து குதறிய வெறி நாய்
    X

    பொள்ளாச்சியில் வாக்கிங் சென்ற 12 பேரை கடித்து குதறிய வெறி நாய்

    பொள்ளாச்சியில் வாக்கிங் சென்ற 12 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இதனால் பெண்கள், முதியவர்கள் வெளியே நடமாடவே அச்சமடைந்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி- கோவை மெயின் ரோடு வி.கே.ஆர். வீதி, வெங்கடேச காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் நேற்று மாலை வாக்கிங் சென்றனர்.

    அப்போது அந்த வழியே வேகமாக வந்த வெறி நாய் வாக்கிங் சென்ற 12 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    நாய் ஓட்டம் பிடித்தவாறு ஆவேசமாக கடித்தது. இதனால் நாயை பிடிக்கவே, தடுக்கவோ முடியவில்லை. சிறிது நேரத்தில் நாய் அங்கிருந்து தப்பி ஓடியது.

    படுகாயம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து, சீனிவாசன், ஜெய பால், தமிழ்மணி, மதன்குமார், நாகராஜ் உள்பட 8 பேர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இன்று தடுப்பூசி போட வருமாறு டாக்டர்கள் கூறினர். மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    பொள்ளாச்சி பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை விரட்டிச் சென்று அச்சுறுத்துகிறது. அப்படி விரட்டும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இரவு நேரங்களில் நடந்து செல்லும்போது நாய்கள் ஆவேசத்துடன் விரட்டுகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் வெளியே நடமாடவே அச்சமடைகிறார்கள். எனவே தெருநாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×