search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் கல்லூரி சென்ற மாணவி மாயம்
    X

    புதுவையில் கல்லூரி சென்ற மாணவி மாயம்

    புதுவையில் கல்லூரி சென்ற மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ஜீவானந்தபுரம் அன்னை பிரியதர்சினி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் அனிதா (வயது18). இவர் லாஸ்பேட்டையில் உள்ள சமுதாய கல்லூரியில் படித்து வந்தார்.

    சம்பவத்தன்று அனிதா கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால் மாலையில் வெகுநேரமாகியும் அனிதா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அனிதா கல்லூரிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து உறவினர் வீடு மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் அனிதா இல்லை. இதனை தொடர்ந்து தனது மகள் மாயமானது குறித்து லட்சுமி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அனிதாவை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரை சேர்நதவர் பாஸ்கரன் (வயது39) இவர் புதுவை காந்தி வீதியில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (36) இவர்களுக்கு தயா (16) என்ற மகனும், பூர்வீகா (4) என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று சிவசங்கரி தனது கணவர் பாஸ்கரனிடம் திருக்கழுகுன்றத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அதற்கு பாஸ்கரன் மகளுக்கு மட்டுமே தேர்வு முடிந்துள்ளதால், மகனுக்கு தேர்வு முடிந்த பின்னர் அனைவரையும் திருக்கழுகுன்றத்துக்கு அழைத்து செல்வதாக கூறியதாக தெரிகிறது. இதனால் சிவசங்கரி மனவருத்தத்தில் இருந்தார்.

    மறுநாள் காலை வழக்கம்போல் பாஸ்கரன் செல்போன் ரீசார்ஜ் கடையை திறக்க சென்றார். இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது வீட்டில் மனைவி, மகன், மகள் காணாமல் கண்டு திடுக்கிட்டார். திருக்கழுகுன்றத்தில் உள்ள மாமியார் வீட்டில் போன் செய்து கேட்டபோது அங்கு அவர்கள் செல்லவில்லை என்பது தெரியவந்தது. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்கள் இல்லை.

    இது குறித்து பாஸ்கரன் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான சிவசங்கரி மற்றும் அவரது மகன், மகள் ஆகிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×