search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனம் அருகே பழக்கடையில் கிடந்த ஆண்குழந்தை: போலீசார் விசாரணை
    X

    திண்டிவனம் அருகே பழக்கடையில் கிடந்த ஆண்குழந்தை: போலீசார் விசாரணை

    திண்டிவனம் அருகே பழக்கடையில் கிடந்த ஆண்குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் பகுதி மெயின்ரோட்டில் கணேஷ்பாபு என்பவர் தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலையில் கடையை கணேஷ்பாபு மனைவி சுமதி திறக்க வந்தார்.

    அப்போது உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையின் அழுகுரல் சத்தம்கேட்டது. பிறந்து ஒருவாரம் ஆன ஆண்குழந்தை ஒரு சேலையால் சுற்றப்பட்டு கிடந்தது.

    இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.

    குழந்தையை பழக்கடையில் போட்டு விட்டுசென்றவர் யார்? என்பன குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×