search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளிக்கடை உரிமையாளர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி ஜவுளிக்கடை உரிமையாளர் பலி

    மோட்டார் சைக்கிள் மோதியதில் ஜவுளிக்கடை உரிமையாளர் இறந்தார். இது குறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி செட்டித்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது48). இவர் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரத்தில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் சீனிவாசன் ஊரணிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே தஞ்சை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சீனிவாசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த சீனிவாசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×