search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் மீதான வழக்கு தமிழகத்தின் அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    தினகரன் மீதான வழக்கு தமிழகத்தின் அவமானம்: பொன்.ராதாகிருஷ்ணன்

    இரட்டை இலை சின்னத்தை பெற தரகர்கள் மூலம் பணம் கொடுத்தது சம்பந்தமாக அ.தி.மு.க.வின் அம்மா கட்சியை சேர்ந்த தினகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது, தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    குழித்துறை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மேற்கு மாவட்டம் மேல்புறத்தில் நடந்த பல்வேறு சாலை பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னத்தை பெற தரகர்கள் மூலம் பணம் கொடுத்தது சம்பந்தமாக அ.தி.மு.க.வின் அம்மா கட்சியை சேர்ந்த தினகரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது, தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம்.

    தேர்தலுக்கு பணம் கொடுக்கும் கட்சிகள் மீதும், அந்த கட்சியின் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர் மீதும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடாத வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

    இந்திய தேர்தல் ஆணையம் புதிய தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்சினைக்காக தி.மு.க. கூட்டிய கூட்டம் விவசாயிகளுக்காக கூட்டியது இல்லை. அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கூட்டணி அச்சாரத்திற்காக கூட்டிய கூட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×