search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் ஏ.டி.எஸ்.பி
    X

    பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் ஏ.டி.எஸ்.பி

    சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த தடியடி தொடர்பாக பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஏ.டி.எஸ்.பி. திணறி வருகிறார்.
    திருப்பூர்:

    சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்திற்குள் நுழைந்து அடித்து விரட்டிய ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனை பற்றி தினமும் சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

    அவரது முகம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதால் அவர் வெளியில் தலைகாட்ட முடியாமல் இருக்கிறார். திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தையொட்டி ஏ.டி.எஸ்.பி. அலுவலகம் உள்ளது. இங்கு காலையில் பணிக்கு வரும் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் வேறு எங்கும் வெளியில் செல்லாமல் அலுவலகத்திலேயே முடங்கி கிடக்கிறார்.

    இதற்கிடையே வாட்ஸ்-அப்பில் ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜனின் போட்டோவுடன் அவரது செல்போன் எண்கள் வெளியிடப்பட்டது. சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு போன் செய்து பெண்களை தாக்கியது ஏன்? எதற்காக அடித்தீர்கள்? என்று சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

    பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஏ.டி.எஸ்.பி. திணறி வருகிறார். மலுப்பலாக அவர் சொல்லும் பதிலை ஏற்க மறுத்து பொதுமக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து வருகிறார்கள்.

    Next Story
    ×