என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பிளஸ்-2 உயிரியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து பிளஸ்-2 உயிரியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704010706119825_12th-Biology-exam-is-hard-students-comment_SECVPF.gif)
X
பிளஸ்-2 உயிரியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
By
மாலை மலர்1 April 2017 1:36 AM GMT (Updated: 1 April 2017 1:36 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பிரிவில் 3 மதிப்பெண் கேள்விகள் பல மறைமுகமாக கேட்கப்பட்டதால் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் பிளஸ்-2 தேர்வில் நேற்று உயிரியல் தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த சில மாணவ, மாணவிகள் கூறியதாவது:-
உயிரியல் தேர்வு கடினமாகத்தான் இருந்தது. உயிரியலில் தாவரவியல் பிரிவுக்கு 75 மதிப்பெண்களும், விலங்கியல் பிரிவுக்கு 75 மதிப்பெண்களும் உண்டு. தாவரவியல் பிரிவில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் சில மறைமுகமான கேள்விகளாக இருந்தன. விலங்கியல் பிரிவிலும் ஒரு மதிப்பெண் கேள்விகள் பலவும், ‘ஆ’ பிரிவில் 3 மதிப்பெண் கேள்விகள் பலவும் மறைமுகமான கேள்விகளாக இருந்ததால் கடினமாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் உயிரியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.
![]( http://img.maalaimalar.com/InlineImage/201704010706119825_2rpgrg04._L_styvpf.gif)
தாவரவியலை தனிப்பாடமாக படித்தவர்களுக்கான தாவரவியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
பிளஸ்-2 தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். சென்னையில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் மை பூசியும், வண்ணப்பொடிகளை பூசியும் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். பள்ளியில் இருந்து அவர்கள் பிரிந்து செல்வதால் அடுத்து மாற்றுச்சான்று வாங்கும்போது தான் பார்க்க முடியும் என்று நண்பர்களின் செல்போன் எண்களை கேட்டு வாங்கிச் சென்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் பிளஸ்-2 தேர்வில் நேற்று உயிரியல் தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த சில மாணவ, மாணவிகள் கூறியதாவது:-
உயிரியல் தேர்வு கடினமாகத்தான் இருந்தது. உயிரியலில் தாவரவியல் பிரிவுக்கு 75 மதிப்பெண்களும், விலங்கியல் பிரிவுக்கு 75 மதிப்பெண்களும் உண்டு. தாவரவியல் பிரிவில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் சில மறைமுகமான கேள்விகளாக இருந்தன. விலங்கியல் பிரிவிலும் ஒரு மதிப்பெண் கேள்விகள் பலவும், ‘ஆ’ பிரிவில் 3 மதிப்பெண் கேள்விகள் பலவும் மறைமுகமான கேள்விகளாக இருந்ததால் கடினமாக இருந்தது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் உயிரியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிகிறது.
![]( http://img.maalaimalar.com/InlineImage/201704010706119825_2rpgrg04._L_styvpf.gif)
தாவரவியலை தனிப்பாடமாக படித்தவர்களுக்கான தாவரவியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
பிளஸ்-2 தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். சென்னையில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் மை பூசியும், வண்ணப்பொடிகளை பூசியும் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். பள்ளியில் இருந்து அவர்கள் பிரிந்து செல்வதால் அடுத்து மாற்றுச்சான்று வாங்கும்போது தான் பார்க்க முடியும் என்று நண்பர்களின் செல்போன் எண்களை கேட்டு வாங்கிச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)